Sunday, September 9, 2012

பருவத்தே பயிர் செய்.



                     


எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு காய்கறிகள் வகிக்கிறது. பெரியவர்களுக்கு 85 கிராம் பழமும், 300 கிராம் காய்கறிகளும் அன்றாடம் தேவை என ஆய்வுகள் கூறுகின்றன. தற்சமயம் உற்பத்தியாகும் காய்கறிகள் பெரியவர்களுக்கு சராசரியாக 220 கிராம் மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது.

காய்கறிகள் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் தரக்கூடியதாக உள்ளதால், வர்த்தக ரீதியில் காய்கறி சாகுபடி செய்வது தற்போதைய தேவையாக உள்ளது.

காய்கறிகளில் சாதாரண ரகங்கள் சாகுபடிக்கு கீழ்கண்டவாறு பருவங்களும் மாதங்களும் முன்னர் கடைபிடிக்கப்பட்டது.
  • தைப்பட்டம்: (டிசம்பர்-ஜனவரி) மாதத்தில் கத்தரி, பூசணி, புடல், பீர்க்கன்.
  • மாசிப்பட்டம்: (பிப்ரவரி, மார்ச்) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன்,வெள்ளரி,
  • ஆடிப்பட்டம்: (ஜூன், ஜூலை) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன், வெள்ளரி

என அந்தந்த பட்டங்களில் அதற்குரிய காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

தற்சமயம் வீரிய ஒட்டுரக காய்கறிகள் அறிமுகமான பின்னர், என்னவகையான காய்கறிகளை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து கோலியனூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் க. வீராசாமி கூறியது:

  • ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
  • பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
  • மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
  • ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
  • மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
  • ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
  • ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
  • ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
  • செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
  • அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
  • நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
  • டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

இங்கு குறிப்பிட்டவைகளில் அந்த காலகட்டத்தில் எந்த காய்கறிக்கு மார்க்கெட் விலை அதிமகமாக உள்ளது என்பதை அறிந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்றார் வீராசாமி.

தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நன்றி: தினமணி

கரிசலாங்கன்னிக் கீரை



கரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்து மிகுந்திருக்கிறது.பல்,ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.தலைமுடி உதிர்தல் காணாமல் போகும்,முடி நரைக்காது.இரத்தம் சுத்தமடையும்.மது,சிகரெட் நச்சினை உடலில் இருந்து நீக்கும்.
தூதுவேளை : சளி,இருமல்,சுவாசம் சம்பந்தமான நோய்களை விரட்டும்.வாதம்,பித்தம்,கபம் பிரச்சினைகளை விரட்டியடிக்கும், நோயெதிர்ப்பு ஆற்றலை வழங்கும்.உடலுக்கு பொன்னிறத்தை கொடுக்கும்.

முசுமுசுக்கை : சளி,இருமல்,இறைப்பு,மூச்சிறைப்பு ஆகியவற்றை விரட்டும் ஆற்றல் உண்டு.

சீரகம் : உடலுக்கு குளிர்ச்சி தரும்,சீரணத்தை தூண்டும், உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்ணை குணமாக்கும்.

மேலே கூறிய இந்த நான்கு பொருட்களையும் அதாவது கரிசாலை,சீரகம்,தூதுவேளை,முசுமுசுக்கை ஆகிய நான்கையும் பொடித்து சூரணமாக்கி முறையே 8 : 4: 2 என்ற விகிதத்தில் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து அதில் இந்த சூரணத்தை போட்டு காய்ச்சி ஒரு தம்ளராக சுண்டியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரை,அல்லது பனைவெல்லம்,அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினந்தோறும் அருந்தி வந்தால் நோய்கள் காணாமல் போகும்,உடல் வலுவடையும்,எந்த நோயும் நம்மை அணுகாது.

இந்த கரிசாலைப்பால் மட்டுமே காலை உணவாகப்போதும் என்கிறார் வள்ளலார்.பசி தாங்கமுடியாதவர்கள் இதனுடன் ஒரு பேயன் பழம் சாப்பிடலாம். இந்த கரிசாலைப்பால் கொழுப்பை குறைப்பதையும்,ஊளைச்சதையை குறைத்து உடலை மெலிய வைப்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.அலர்ஜி,ஈஸ்னோபிலியா தொல்லையில் இருந்தும் குணம் பெற்றேன்.

இதை நான் 6 வருடங்களுக்கு முன்மனித உரிமை ஆர்வலர் பேராசியர்.கல்யாணி(பிரபாகல்விமணி) அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.அவர் இன்று வரை கரிசாலைப்பாலை காலை உணவாக அருந்தி சுறுசுறுப்புடன் செயல்படுவதாக கூறுகிறார்.இதனால் எனக்கு ஒரு நன்மை என்னவெனில் இந்த கரிசாலைப்பாலை தயாரிக்க எனக்கு தேவையான பொடிகளை பேராசிரியரிடம் இருந்தே நான் பெற்றுக்கொள்கிறேன்.

மாதம் நூறு ரூபாய் செலவில் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன ஒரு அற்புதமான வழிமுறையை வள்ளலார் உருவாக்கியிருக்கிறார் பாருங்கள்.

உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் நச்சு கலந்து விட்ட இந்த காலத்தில் கரிசாலைப்பால் அருந்தி வளமுடன் வாழ தயாராவோமா?.